Posts

Showing posts from July, 2018

மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவனத்திற்கு..!!

தற்போது மல்லிகைக்கு நல்ல விலை கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜீன் மாதத்தில் பூக்கள் சிவப்பாகியும் சுருங்கியும் கருகியும் வெள்ளைநிறப் புழுக்களுடனும் சில சமயம் சிவப்பு நிற கொசு போன்ற பூச்சித் தாக்கமும் அதிகரித்துள்ளது. தீர்வு: 1.விளக்குப் பொறியினை செடியின் மேல் உயத்திற்கிணையாக ஏக்கருக்கு 3-4 எண்களை தினசரி மாலை 6 - 9.30 வரை எரியவிடலாம். 2. பெவேரியா பேசியானா மற்றும் வெர்டிசீலியம் லக்கானி போன்ற இயற்கை வகையில் இயங்கும் திரவங்களை 100 லிட்டருக்கு ஒவ்வொன்றையும் 700 மி.லிட்  கலந்து 7 நாட்கள் இடைவெளியில், (இருமுறை மட்டும் ) மாலை 5 மணிக்கு மேல் செடி முழுவதும் நன்கு நனையுமாறு தெளிப்பது நலம். இத்திரவங்களில் உயிர்கள் இருப்பதால் அவை இறந்து விடாமலிருக்க தெளிப்பதற்கு முடிந்தவரை பேட்டரி தெளிப்பானைத் தவிர்க்கலாம். முடியாத நிலையில் தெளிப்பானின் வேகத்தினைக் குறைத்து வைத்து தெளிப்பது சிறப்பு. மல்லிகை செடியின் தூரில் மாதமொருமுறை பூஞ்சாணக்கொல்லியான சூடோமோனாஸை குறைந்தபட்சம் பவுடராக இருந்தால் 10 கிராமும் திரவமாக இருந்தால் 5 மி.லிட் கலந்து வேரில் அளித்து பாசனம் செய்து,  பின்பு அது கொடுத்த அடு...

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை!!

கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம், மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும். பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும்.  கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும். பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.கன்றுகளுக்கு நோய்  வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்...

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

🌿 விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம். 🌿 ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். 🌿 ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள். 🌿 மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். 🌿 தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் : 🍁 வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயத்தை பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றை பயிர...

வெங்காயத்துக்கேற்ற இரண்டு பட்டங்கள்!

“சின்னவெங்காயத்துக்கு, சம்பா பட்டம் (ஆனி முதல் ஆவணி மாதம் வரை), குறுவைப்பட்டம் (ஐப்பசி முதல் தை மாதம் வரை) ஆகிய இரண்டு பட்டங்களும் சிறந்தவை (இவர் சம்பா பட்டத்தில் வெங்காயம் நடவு செய்திருக்கிறார்). சம்பா பட்டத்தில் விதைக்க வேண்டுமென்றால், வைகாசி மாதக் கடைசியிலேயே ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை உழவு செய்து காய விட வேண்டும். குறுவைப் பட்டத்தில் விதைப்பவர்கள் என்றால், புரட்டாசி மாதக் கடைசியில் ஆட்டுக்கிடை அமைத்து காய விடலாம். சம்பா சாகுபடிக்கு ஆனி மாதமும், குறுவைக்கு ஐப்பசி மாதமும் ஓர் உழவு அடித்துவிட்டு... உழவடித்த அன்றே 10 அடி நீளம் 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். 60 சென்ட் நிலத்துக்கு 250 பாத்திகள் வரை வரும். பாத்தி எடுத்த உடனே தண்ணீர் பாய்ச்சி, தலைப்பகுதி மேலே இருக்குமாறு வெங்காயத்தின் முக்கால்பகுதியை மண்ணுக்குள் புதைத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, 4-ம் நாள் மற்றும் 9-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். நுனிக்கருகலுக்கு, வேப்பங்கொட...

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!

தமிழகத்தில் பாரம்பரிய உணவான சிறுதானிய உற்பத்தி குறைந்து வரும் நிலையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்து அவற்றின் விதைகளை மற்ற விவசாயிகளுக்கு வழங்கி வரும் இயற்கை விவசாயியை பற்றி இங்கு படித்தறியலாம்! விழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் இயற்கை விவசாய அனுபவங்களைத் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்... சிறுதானிய சாகுபடியை எத்தனை வருடங்களாக செய்துவருகிறீர்கள்? தேனையும் தினை மாவையும் உண்டு நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்ததை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது. தமிழகத்தில் பரவலாக நடைபெற்ற சிறுதானிய சாகுபடி தற்போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. நான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் சிறுதானியங்களை நான் சாகுபடி செய்யவில்லை, ஈஷாவின் தொடர்புக்கு பின்புதான் சிறுதானியங்கள் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. பல்லடத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயப் பயிற்சியில் நாட்டுரக விதைகள், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சிறுதானிய விதைகளை கோவை வேளாண் பல்க...

விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா

நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது. விலங்குகள் மற்றும் மனிதர்களில், பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்கும் எடை கூட...

டெல்டா மற்றும் கடலோர மாவட்ட விவசாயிகளுக்கான தமிழக அரசின் சிறப்புத்திட்டம்.

தமிழகத்தில் நிலவும் நிலத்தடிநீர் குறைவு, மானாவாரி நிலங்கள் அதிகரித்தல், நிலங்கள் உப்பாகுதல், கடல்நீர் உட்புகுதல், போன்ற அதிகரித்துவரும் நீர்த் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான நாகபட்டினம், தஞ்சாவூர்,   திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 10000 பண்ணைக்குட்டைகளை ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ 100 கோடிகளில் செயல்படுத்த வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த சிறப்புத் திட்டம் வேளாண் பொறியியல் துறை மூலம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் தெரிவித்துள்ளபடி ரூ. 1 லட்சத்திற்குப் பண்ணைக்குட்டை அமைத்தால் சுமார் 18-20 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு குட்டையில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மழைநீரை அதிக அளவில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் கடைமடையில் உள்ள விவசாயிகள் ...

மூலிகை சாகுபடியில் மானியம்.

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90%  மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப்  பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகை பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. இவ்வாரியமனது அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75% ம், உற்பத்தி குறைந்து வரும் தீண்ட காலப்பயிர்களைக்கு 50% மும் மற்ற மூலிகைகளைக்கு 20%  மும் மானியம் வழங்குகிறது. மானியத்தை தனி விவசாயியாக அல்லாமல்  குழுவாக செயல்பட்டால் பெறுதல் எளிதாகும். தமிழ் நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை ஒரு எக்டேரில் சாகுபதி செய்ய மூலிகை பயிர் வாரியத்தால் பரித்றைக்கப்பட்டுள்ள மானியத்தைக் காண்போம். வசம்பு- 20%, சோற்றுக்கற்றாழை-20%, பேர ரத்தை - 20%, சித்தரத்தை - 20%, தண்ணீர்விட்டான் கிழங்கு - 20%, வேம்பு - 20%, நீர்பிரம்மி -20%,  சாரணத்தி - 20%...

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் !!

👉 விழுப்புர மாவட்ட விவசாயிகளுக்கு கரீப் பருவத்தில் 2018-2019 வரை அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டு விவரம்.., 👉 விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் : 👉 நெல், கம்பு, மக்காச்சோளம், மணிலா, பருத்தி, மஞ்சள், வெங்காயம், வாழை, மரவள்ளி. விவரங்கள் : 🌾 ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.25,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.883. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.500. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 31.07.2018. 🌾 ஒரு ஏக்கர் கம்பிற்கு காப்பீட்டுத் தொகை ரூ.7,800 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.1,718. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.156. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.08.2018. 🌽 ஒரு ஏக்கர் மக்காச்சோளத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.14,300 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.2,768. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.286. பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.08.2018. 🌿 ஒரு ஏக்கர் மணிலா பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.23,000 மொத்த காப்பீட்டுக் கட்டணம் ரூ.1,888. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.420....

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

🐤சாதாரணமாக கோழி இனங்களில் அடை காக்கும் பண்பு  நாட்டு கோழிகளுக்கு மட்டுமே உரித்தானது . கோழிகளை அடை வைக்க சிறந்த காலம் தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை. அடுத்து ஆனி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை. ஏனெனில் குளிர்காலத்தில் பொரிக்கும் குஞ்சுகளுக்கு அம்மை நோய் தாக்க அதிக வாய்ப்பு . 🐦முட்டை இட்டு முடித்த உடனேயே பெட்டை அடையில் உட்கார ஆரம்பிக்கும். சில சமயங்களில் அடையில் உட்கார்ந்த பிறகு கூட ஓரிரண்டு முட்டைகள் இடும். 🐤பருவத்திற்கு வந்த பெட்டை ஒரு வருடத்தில் சுமார் ஆறு மாதங்கள் அடையில் கழிக்கும். அந்த சமயத்தில் தீவனம் உண்பது மிக குறைவு. தண்ணீர் மட்டுமே அதிகம் குடிக்கும். 🐥அடை காக்கும் கோழிகளை மணலில் அடை வைப்பது சிறந்தது . காரணம் சரியான வெப்பநிலை பராமரிக்க படும். இரண்டாவது பேன் தொல்லை ஓரளவு தவிர்க்க படும். முட்டைகள் விலகி விடாமல் ஒரே இடத்தில் இருக்கும். இதனால் பொரிக்கும் திறன் அதிகரிக்கும். 🐦முடிந்த வரை அவை அடை யில் இருந்து தானாக எழுந்து வந்து இரை மற்றும் தண்ணீர் பருகுமாறு இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நெல் மட்டுமே தீவனமாக அளிப்பது நல்லது. அவற்றிற்கு எந்த ஒரு தொந்தரவு இல்லா...

மூலிகை விவசாயம்

" ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை. இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள். இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும் தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்...

##நாட்டு மாடுகள் இலவசம்##

இயற்கை விவசாயம் செய்யும் விவசாய அன்பர்கள்களுக்கும் நாட்டு மாடுகள் வளர்க விரும்பும் அன்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். எங்களிடம் நூற்றுக்கும் மேலான நாட்டு பசு மற்றும் காளை  கன்றுகள் உள்ளது ...பராமரிப்பு மற்றும் தீவன பற்றாக்குறையினால் பரபரிப்பு கடினமாக உள்ளது ......எனவே  வளர்க விரும்பும் விவசாயிகளுக்கு  இலவசமாக கோடுக்க விருப்புகிறேன் ...... தகவலுக்கு T.மணி கும்மிடிப்பூண்டி வட்டம் திருவள்ளுவர் மாவட்டம் செல் 9445722500 9445545191 9842784219 தவறான நோக்கத்துக்கும்...மாமிசத்துக்கும்......கட்டாயம்  கிடையாது...... உங்களிடம் உள்ள மற்ற விவசாய குழு சொந்தங்களுக்கும் தகவல்களை பகிர்வும்

தென்னையில் காய்கள் உதிர்கிறது என்ன தீர்வு?

தென்னையில் குறும்பை கொட்டுவது பல காரணங்களால் ஏற்படும் பெண்பூக்கள் உற்பத்தி- பொதுவாக தென்னை தன் உடல் வெப்பம் தணிந்து இருக்கும் போது தான் அதிகமாக இருக்கும். உடல் வெப்பசமநிலையை கையாள்வது பொட்டாசியம் சத்துக்கள் தான். வெயில் காலத்தில் அனல் காற்றை தண்டில் சேமிக்கப்பட்ட சத்து நீரை எடுத்து தான் சமாளிக்க இயலும். மேலும் இந்த அதிக வெப்பம் சத்து நீரை விரிவடையச் செய்து அதன் கனத்தை அதிகப்படுத்தும். இந்த கன நீர் நரம்புகளுக்குள் செல்ல இயலாமல் நிற்கும். மரத்தின் தண்டில் ஏற்படும் புற காயங்களை பூசணங்களை வரவேற்று சத்து நீரை கெடுத்து சாறு வடிதல் நோயை உண்டாக்கும். ஆக தென்னையின் உடல் வெப்பம் சமநிலைக்கு பொட்டாசியம் சத்துக்கள் மிகவும் அவசியம். போரான் சத்து போரான் சத்து சிலிகா சத்துடன் சேர்ந்து வெளிப்புற செல்கள் கட்டமைப்பில் ஈடுபடும். சரியான மணிச்சத்து சுண்ணாம்பு சத்து சிலிகா சத்து, கரிம சத்து இவற்றுடன் போரான் சத்துக்கள் சேர்ந்து கடினமான பெக்டின் நார் செல்களை உற்பத்தி செய்யும். இவை கடினமான வெப்பத்தை தாங்க வல்லது. நாட்டு தென்னை மரங்கள் இயல்பாகவே அதிக நார்ச்சத்து உடைய தண்டமைப்பை கொண்டதால் இவை கடுமையான வறட...

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற

Image
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள் போடவேண்டும் (ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்) துளைகளுக்கு 1 இன்ச் கீழ் வரை நீரை நிரப்பிக் கொள்ளவும். 10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு, பாட்டிலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும். 12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும். , நாளொன்றுக்கு 200 ஈக்களுக்கு குறைவில்லாமல் விழுந்து விடும் குப்பையில் குழிதோண்டி புதைத்து விடவும் மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முறையில் முயற்சியை செய்யுங்கள் (யோசனைக்கு நன்றி: *சேந்தமங்கலம் டெல்டா இயற்கை விவசாயிகள் குழுவிலிருந்து நன்றி

வீட்டில் இருந்து கொண்டே விவசாயம்:-

இந்தியாவிலேயே முதல் முறையாக மோட்டார் மற்றும் கம்ப்ரஸ்ஸர்களுக்கான ஒரே செல்போன் கன்ட்ரோலர் 1) இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்டார்ட்டர் இல்லாமலேயே இரண்டு மோட்டார்களையும் ஆன் / ஆப் செய்யும் வசதி. 2) கிணற்று மோட்டாருக்கான ஸ்டார்ட்டர், சேஞ்ச் ஓவர் சுவிட்ச் மற்றும் போர் மோட்டார் ஸ்டார்ட்டர் ஆகிய மூன்றும் முழுவதுமாக நீக்கப்பட்டு ஒரே ஒரு கன்ட்ரோலர் மூலம் இரண்டு மோட்டார்களையும், கையினாலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ ஆன் / ஆப் செய்து கொள்ளலாம். 3) உதாரணத்திற்கு டைமர் மூலம் போர் மோட்டார் 5 மணி நேரம் ஓடிய பிறகு தானியங்கியாக போர் மோட்டார் ஆப் ஆகி கிணற்று மோட்டார் ஆன் செய்யப்படும். 4) குறைவான அல்லது அதிக மின்னழுத்தம், பேஸ் கட், ஏதாவது ஒரு கிணறு / போரில் தண்ணீர் இல்லை என்றாலும் பைப் அடைபட்டாலும் மோட்டார் உடனடியாக ஆப் செய்யப் படுவதனால் 100% பாதுகாப்பு மோட்டாருக்கு வழங்கப்படுகிறது. Contact us Prof. Moorthy Selvakumaran ஸ்ரீ செல்வக்குமாரன் இண்டஸ்ட்ரீஸ் 240, கண்ணுடையாம்பாளையம், கணபதிபாளையம், கரூர் ரோடு ஈரோடு-638153. Ph: 0424 – 2351766, 2351733. CEO: 9 44 44 34 118, 96 553 21 21 6, sales: 9...

கத்தரி சாகுபடி

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது. விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் புறக்கணித்து, இயற்கை மற்றும் உயிர்ரக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், கத்தரி, விஷத்தன்மை சேர்வதைத் தடுக்கலாம். கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான், இலை பேன், மாவுப்பூச்சி, எபிலாக்னான் பொறி வண்டு ஆகியவை தாக்கும். தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை, கத்தரி செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம். காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ...