தென்னையில் காய்கள் உதிர்கிறது என்ன தீர்வு?
தென்னையில் குறும்பை கொட்டுவது பல காரணங்களால் ஏற்படும்
பெண்பூக்கள் உற்பத்தி- பொதுவாக தென்னை தன் உடல் வெப்பம் தணிந்து இருக்கும் போது தான் அதிகமாக இருக்கும். உடல் வெப்பசமநிலையை கையாள்வது பொட்டாசியம் சத்துக்கள் தான்.
வெயில் காலத்தில் அனல் காற்றை தண்டில் சேமிக்கப்பட்ட சத்து நீரை எடுத்து தான் சமாளிக்க இயலும். மேலும் இந்த அதிக வெப்பம் சத்து நீரை விரிவடையச் செய்து அதன் கனத்தை அதிகப்படுத்தும். இந்த கன நீர் நரம்புகளுக்குள் செல்ல இயலாமல் நிற்கும். மரத்தின் தண்டில் ஏற்படும் புற காயங்களை பூசணங்களை வரவேற்று சத்து நீரை கெடுத்து சாறு வடிதல் நோயை உண்டாக்கும். ஆக தென்னையின் உடல் வெப்பம் சமநிலைக்கு பொட்டாசியம் சத்துக்கள் மிகவும் அவசியம்.
போரான் சத்து
போரான் சத்து சிலிகா சத்துடன் சேர்ந்து வெளிப்புற செல்கள் கட்டமைப்பில் ஈடுபடும். சரியான மணிச்சத்து சுண்ணாம்பு சத்து சிலிகா சத்து, கரிம சத்து இவற்றுடன் போரான் சத்துக்கள் சேர்ந்து கடினமான பெக்டின் நார் செல்களை உற்பத்தி செய்யும். இவை கடினமான வெப்பத்தை தாங்க வல்லது. நாட்டு தென்னை மரங்கள் இயல்பாகவே அதிக நார்ச்சத்து உடைய தண்டமைப்பை கொண்டதால் இவை கடுமையான வறட்சியை தாங்கும். போரான் மட்டுமல்லாது மேற்கண்ட அத்தனை ஊட்டச்சத்துக்கள் சேர்ந்தே காய்கள் உதிர்வதை தடுக்க இயலும்
சிறிய பெண்பூக்கள்
மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக இடப்பட்ட இரசாயன உரங்களின் எச்சம் நஞ்சாக மாறி வருகிறது. யூரியாவில் 54% நிரப்பி வகை உப்புகள், சூப்பர் பாஸ்பேட்டில் 84% கால்சைட் வகை உப்புகள் பொட்டாசில் 40% நிரப்பி வகை உப்புகள் இருக்கிறது.
இந்த மீள்வேதி பொருட்களை முறையாக பெய்த மழை ஆழ் மண்கண்டத்தில் அழுத்தி ஒரு நீர்ம தடுப்பானாக விளங்கி வந்தது. தற்காலத்தில் நிகழும் முறையற்ற வானிலை மண்ணின் உப்புகளை வெளியே கொண்டு வந்து வேர் தொகுதியில் வைப்பதால் மண் வேதி நிலையில் மாற்றம் ஏற்பட்டு பூக்கள் அளவு மற்றும் பருமனை நிர்வகிக்கும் மரத்தின் சுய ஹார்மோன்கள் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் யாவும் முறையற்ற ஊட்டச்சத்து மேலேற்றத்தால் நிகழ்கிறது. சில உதிர்ந்த குறும்பைகளின் மைய நரம்புகளில் வெள்ளையாக படிந்து நிற்கும் சோடியம் சார்ந்த உப்புகள் அதிக உப்பு நிலையாலும் குறும்பை உதிரும் என்பதற்கு சான்று. இவ்வாறு அதிக உப்பு நிலை கொண்ட நிலத்தில் பெண்பூக்கள் கருவாக வலிமை இல்லாமல் உருவாகும்.
இவை உதிரத்தான் செய்யும். முறையான சத்து நிர்வாகத்தில் தோன்றும் பூக்கள் அடிப்பகுதியில் இரண்டு கைகளாலும் பிடிக்கும் அளவு இருக்கும். பாசன நீரில் இருக்கும் உப்புகளும் உதாரணமாக சோடியம் பை கார்பனேட் கால்சியம் குளோரைடு உப்புகளும் காய்கள் உதிர்வதை ஏற்படுத்தும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் தென்னைக்கென பிரத்யேக இயற்கை உரத்தை தயாரித்துள்ளோம் இந்த உரத்தில் மண்ணில் உள்ள வேதித்தன்மையை இதில் உள்ள அங்கக கார்பன் மற்றும் சிலிக்கா,இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள்
சரி செய்து பெரிய தடிமனான பூக்களை உற்பத்தி செய்யும். மரத்தின் உடற்செயலியல் முறையாண்மை சத்துக்களை தொடர்ந்தும் தேவையான அளவு தருகிறது. இலைகளின் பரப்பளவு மற்றும் இலைகளில் தடிமனான பசுங்கணிக செல்களை உற்பத்தி இவற்றில் கிடைக்கும் மேம்பாடு அதிக ஒளிச்சேர்க்கையை நடத்தி அதிக மற்றும் மரத்தின் ஆரோக்கியம் குறையாத மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
ப. பாலசுப்பிரமணியன்
தலைமை அறிவியலர்
சக்தி அக்ரி கிளினிக்
மேட்டுப்பாளையம் சாலை
காரமடை 641104
போன -
+919442253021
பெண்பூக்கள் உற்பத்தி- பொதுவாக தென்னை தன் உடல் வெப்பம் தணிந்து இருக்கும் போது தான் அதிகமாக இருக்கும். உடல் வெப்பசமநிலையை கையாள்வது பொட்டாசியம் சத்துக்கள் தான்.
வெயில் காலத்தில் அனல் காற்றை தண்டில் சேமிக்கப்பட்ட சத்து நீரை எடுத்து தான் சமாளிக்க இயலும். மேலும் இந்த அதிக வெப்பம் சத்து நீரை விரிவடையச் செய்து அதன் கனத்தை அதிகப்படுத்தும். இந்த கன நீர் நரம்புகளுக்குள் செல்ல இயலாமல் நிற்கும். மரத்தின் தண்டில் ஏற்படும் புற காயங்களை பூசணங்களை வரவேற்று சத்து நீரை கெடுத்து சாறு வடிதல் நோயை உண்டாக்கும். ஆக தென்னையின் உடல் வெப்பம் சமநிலைக்கு பொட்டாசியம் சத்துக்கள் மிகவும் அவசியம்.
போரான் சத்து
போரான் சத்து சிலிகா சத்துடன் சேர்ந்து வெளிப்புற செல்கள் கட்டமைப்பில் ஈடுபடும். சரியான மணிச்சத்து சுண்ணாம்பு சத்து சிலிகா சத்து, கரிம சத்து இவற்றுடன் போரான் சத்துக்கள் சேர்ந்து கடினமான பெக்டின் நார் செல்களை உற்பத்தி செய்யும். இவை கடினமான வெப்பத்தை தாங்க வல்லது. நாட்டு தென்னை மரங்கள் இயல்பாகவே அதிக நார்ச்சத்து உடைய தண்டமைப்பை கொண்டதால் இவை கடுமையான வறட்சியை தாங்கும். போரான் மட்டுமல்லாது மேற்கண்ட அத்தனை ஊட்டச்சத்துக்கள் சேர்ந்தே காய்கள் உதிர்வதை தடுக்க இயலும்
சிறிய பெண்பூக்கள்
மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக இடப்பட்ட இரசாயன உரங்களின் எச்சம் நஞ்சாக மாறி வருகிறது. யூரியாவில் 54% நிரப்பி வகை உப்புகள், சூப்பர் பாஸ்பேட்டில் 84% கால்சைட் வகை உப்புகள் பொட்டாசில் 40% நிரப்பி வகை உப்புகள் இருக்கிறது.
இந்த மீள்வேதி பொருட்களை முறையாக பெய்த மழை ஆழ் மண்கண்டத்தில் அழுத்தி ஒரு நீர்ம தடுப்பானாக விளங்கி வந்தது. தற்காலத்தில் நிகழும் முறையற்ற வானிலை மண்ணின் உப்புகளை வெளியே கொண்டு வந்து வேர் தொகுதியில் வைப்பதால் மண் வேதி நிலையில் மாற்றம் ஏற்பட்டு பூக்கள் அளவு மற்றும் பருமனை நிர்வகிக்கும் மரத்தின் சுய ஹார்மோன்கள் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் யாவும் முறையற்ற ஊட்டச்சத்து மேலேற்றத்தால் நிகழ்கிறது. சில உதிர்ந்த குறும்பைகளின் மைய நரம்புகளில் வெள்ளையாக படிந்து நிற்கும் சோடியம் சார்ந்த உப்புகள் அதிக உப்பு நிலையாலும் குறும்பை உதிரும் என்பதற்கு சான்று. இவ்வாறு அதிக உப்பு நிலை கொண்ட நிலத்தில் பெண்பூக்கள் கருவாக வலிமை இல்லாமல் உருவாகும்.
இவை உதிரத்தான் செய்யும். முறையான சத்து நிர்வாகத்தில் தோன்றும் பூக்கள் அடிப்பகுதியில் இரண்டு கைகளாலும் பிடிக்கும் அளவு இருக்கும். பாசன நீரில் இருக்கும் உப்புகளும் உதாரணமாக சோடியம் பை கார்பனேட் கால்சியம் குளோரைடு உப்புகளும் காய்கள் உதிர்வதை ஏற்படுத்தும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் தென்னைக்கென பிரத்யேக இயற்கை உரத்தை தயாரித்துள்ளோம் இந்த உரத்தில் மண்ணில் உள்ள வேதித்தன்மையை இதில் உள்ள அங்கக கார்பன் மற்றும் சிலிக்கா,இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள்
சரி செய்து பெரிய தடிமனான பூக்களை உற்பத்தி செய்யும். மரத்தின் உடற்செயலியல் முறையாண்மை சத்துக்களை தொடர்ந்தும் தேவையான அளவு தருகிறது. இலைகளின் பரப்பளவு மற்றும் இலைகளில் தடிமனான பசுங்கணிக செல்களை உற்பத்தி இவற்றில் கிடைக்கும் மேம்பாடு அதிக ஒளிச்சேர்க்கையை நடத்தி அதிக மற்றும் மரத்தின் ஆரோக்கியம் குறையாத மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
ப. பாலசுப்பிரமணியன்
தலைமை அறிவியலர்
சக்தி அக்ரி கிளினிக்
மேட்டுப்பாளையம் சாலை
காரமடை 641104
போன -
+919442253021
Comments
Post a Comment