மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவனத்திற்கு..!!

தற்போது மல்லிகைக்கு நல்ல விலை கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜீன் மாதத்தில் பூக்கள் சிவப்பாகியும் சுருங்கியும் கருகியும் வெள்ளைநிறப் புழுக்களுடனும் சில சமயம் சிவப்பு நிற கொசு போன்ற பூச்சித் தாக்கமும் அதிகரித்துள்ளது.

தீர்வு:

1.விளக்குப் பொறியினை செடியின் மேல் உயத்திற்கிணையாக ஏக்கருக்கு 3-4 எண்களை தினசரி மாலை 6 - 9.30 வரை எரியவிடலாம்.

2. பெவேரியா பேசியானா மற்றும் வெர்டிசீலியம் லக்கானி போன்ற இயற்கை வகையில் இயங்கும் திரவங்களை 100 லிட்டருக்கு ஒவ்வொன்றையும் 700 மி.லிட்  கலந்து 7 நாட்கள் இடைவெளியில், (இருமுறை மட்டும் ) மாலை 5 மணிக்கு மேல் செடி முழுவதும் நன்கு நனையுமாறு தெளிப்பது நலம்.

இத்திரவங்களில் உயிர்கள் இருப்பதால் அவை இறந்து விடாமலிருக்க தெளிப்பதற்கு முடிந்தவரை பேட்டரி தெளிப்பானைத் தவிர்க்கலாம். முடியாத நிலையில் தெளிப்பானின் வேகத்தினைக் குறைத்து வைத்து தெளிப்பது சிறப்பு.

மல்லிகை செடியின் தூரில் மாதமொருமுறை பூஞ்சாணக்கொல்லியான சூடோமோனாஸை குறைந்தபட்சம் பவுடராக இருந்தால் 10 கிராமும் திரவமாக இருந்தால் 5 மி.லிட் கலந்து வேரில் அளித்து பாசனம் செய்து,
 பின்பு அது கொடுத்த அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும் கொடுக்காமலிருப்பதும் நல்லது.

முடிந்தவரை இத்திரவங்கள் புதிதாகத் தயாரிக்கப்பட்டதாகவும் தயாரித்த மாதங்களை ஆய்வு செய்து வாங்குவதும்,
 நல்ல தரமான கம்பெனி தயாரிப்பாகவும் இருப்பது நல்லது.

Comments

Popular posts from this blog

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!