அடை காக்கும் கோழிகள் பராமரிப்பு


🐤சாதாரணமாக கோழி இனங்களில் அடை காக்கும் பண்பு  நாட்டு கோழிகளுக்கு மட்டுமே உரித்தானது . கோழிகளை அடை வைக்க சிறந்த காலம் தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை. அடுத்து ஆனி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை. ஏனெனில் குளிர்காலத்தில் பொரிக்கும் குஞ்சுகளுக்கு அம்மை நோய் தாக்க அதிக வாய்ப்பு .


🐦முட்டை இட்டு முடித்த உடனேயே பெட்டை அடையில் உட்கார ஆரம்பிக்கும். சில சமயங்களில் அடையில் உட்கார்ந்த பிறகு கூட ஓரிரண்டு முட்டைகள் இடும்.

🐤பருவத்திற்கு வந்த பெட்டை ஒரு வருடத்தில் சுமார் ஆறு மாதங்கள் அடையில் கழிக்கும். அந்த சமயத்தில் தீவனம் உண்பது மிக குறைவு. தண்ணீர் மட்டுமே அதிகம் குடிக்கும்.

🐥அடை காக்கும் கோழிகளை மணலில் அடை வைப்பது சிறந்தது . காரணம் சரியான வெப்பநிலை பராமரிக்க படும். இரண்டாவது பேன் தொல்லை ஓரளவு தவிர்க்க படும். முட்டைகள் விலகி விடாமல் ஒரே இடத்தில் இருக்கும். இதனால் பொரிக்கும் திறன் அதிகரிக்கும்.

🐦முடிந்த வரை அவை அடை யில் இருந்து தானாக எழுந்து வந்து இரை மற்றும் தண்ணீர் பருகுமாறு இருக்க வேண்டும். அந்த சமயத்தில் நெல் மட்டுமே தீவனமாக அளிப்பது நல்லது. அவற்றிற்கு எந்த ஒரு தொந்தரவு இல்லாமல் இருப்பது அதிக குஞ்சுகள் பொரிக்க வாய்ப்பு.

🐥ஒருவேளை மூடி வைக்கும் காலக்கட்டத்தில் கண்டிப்பாக நாள் மாற்றி நாள் அல்லது இரண்டு நாட்கள் ஒரு முறை எடுத்து வெளியில் விடவேண்டும்.

🐦சாதாரணமாக அடைகோழிகளை நோய் தாக்குவது மிக குறைவு . திடமான கோழிகளை தான் நோய் அதிகம் தாக்குகிறது. அதனால்  தண்ணீர் ல் துளசி சாற்றுடன் சிறிது அளவு மஞ்சள் தூள் கலந்து வைப்பதன் மூலம் நோய் தாக்குதலை முற்றிலும் தவிர்க்க லாம்

🐦ஒருவேளை முட்டைகள் அனைத்தும் அழுகி அல்லது பொரிக்காமல்  போனால் அதே கோழியை புதிய முட்டைகள் மீது மறுபடியும் உட்கார வைக்க கூடாது. முடிந்த வரை கூரை வீடுகளில் அடை வைப்பது நல்லது.

🐥பேன் தொல்லை இருந்தால் கோழிகள் அடையில் உட்காராது .   ஒரு வேளை பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சிறிது கற்பூர கரைசலை உடலின் மேற்புறம் தடவி விட்டால் சிறிது நேரத்தில் சுத்தமாக இறந்து கீழே கொட்டி விடும் .

🐦அடைகாக்கும் காலத்தில் நாம் கையால் முட்டைகளை திருப்பி விடுவது போன்ற வேலைகளை செய்ய கூடாது.  இறகுகளை  வெட்டிய கோழிகளை அடையில் உட்கார வைக்க கூடாது . காரணம் வெப்பம் சரியாக முட்டைகள் மீது படாது.

🐥வெப்பநிலை அதிகரிக்கும் போது அவை தானாகவே எழுந்து நின்று பிறகு முட்டைகள் மீது உட்கார்ந்து கொள்ளும் . அவையே முட்டைகளை அலகின் உதவியுடன் மற்றும் கால் தொடைகள் மூலமும் திருப்பி விட்டுக்கொள்ளும் .

🐤நன்றி
ஸ்ரீதர் சென்னை . 9092779779

Comments

Post a Comment

Popular posts from this blog

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!