டெல்டா மற்றும் கடலோர மாவட்ட விவசாயிகளுக்கான தமிழக அரசின் சிறப்புத்திட்டம்.
தமிழகத்தில் நிலவும் நிலத்தடிநீர் குறைவு, மானாவாரி நிலங்கள் அதிகரித்தல், நிலங்கள் உப்பாகுதல், கடல்நீர் உட்புகுதல், போன்ற அதிகரித்துவரும் நீர்த் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 10000 பண்ணைக்குட்டைகளை ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ 100 கோடிகளில் செயல்படுத்த வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இந்த சிறப்புத் திட்டம் வேளாண் பொறியியல் துறை மூலம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் தெரிவித்துள்ளபடி ரூ. 1 லட்சத்திற்குப் பண்ணைக்குட்டை அமைத்தால் சுமார் 18-20 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு குட்டையில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழைநீரை அதிக அளவில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் கடைமடையில் உள்ள விவசாயிகள் உட்பட இப்பகுதி விவசாயிகள் அனைவருக்கும் நிலத்தடிநீர் சேகரிப்பு, போர் கிணறுகளில் நீர் செறிவூட்டல், நிலங்களில் படிந்துள்ள உப்பை அலசி பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், காய்கறி, சிறுதானியம் பயறு வகை போன்ற பயிர்களுக்கு உயிர்நீர் கொடுக்கவும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன்வளர்ப்பு போன்ற சிறுதொழில் முனையவும் இந்த பண்ணைக்குட்டைகள் பெரிதும் உதவும்.
எனவே உடனடியாக விண்ணப்பிக்கவும்.இச் செய்தி குறித்த மேலும் விபரங்களுக்கு இப்பகுதிகளில் உள்ள வேளாண் பொறியியல் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த மாவட்டங்களில் இந்த சிறப்புத் திட்டம் வேளாண் பொறியியல் துறை மூலம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் தெரிவித்துள்ளபடி ரூ. 1 லட்சத்திற்குப் பண்ணைக்குட்டை அமைத்தால் சுமார் 18-20 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு குட்டையில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழைநீரை அதிக அளவில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் கடைமடையில் உள்ள விவசாயிகள் உட்பட இப்பகுதி விவசாயிகள் அனைவருக்கும் நிலத்தடிநீர் சேகரிப்பு, போர் கிணறுகளில் நீர் செறிவூட்டல், நிலங்களில் படிந்துள்ள உப்பை அலசி பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், காய்கறி, சிறுதானியம் பயறு வகை போன்ற பயிர்களுக்கு உயிர்நீர் கொடுக்கவும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன்வளர்ப்பு போன்ற சிறுதொழில் முனையவும் இந்த பண்ணைக்குட்டைகள் பெரிதும் உதவும்.
எனவே உடனடியாக விண்ணப்பிக்கவும்.இச் செய்தி குறித்த மேலும் விபரங்களுக்கு இப்பகுதிகளில் உள்ள வேளாண் பொறியியல் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment