Posts

மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவனத்திற்கு..!!

தற்போது மல்லிகைக்கு நல்ல விலை கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜீன் மாதத்தில் பூக்கள் சிவப்பாகியும் சுருங்கியும் கருகியும் வெள்ளைநிறப் புழுக்களுடனும் சில சமயம் சிவப்பு நிற கொசு போன்ற பூச்சித் தாக்கமும் அதிகரித்துள்ளது. தீர்வு: 1.விளக்குப் பொறியினை செடியின் மேல் உயத்திற்கிணையாக ஏக்கருக்கு 3-4 எண்களை தினசரி மாலை 6 - 9.30 வரை எரியவிடலாம். 2. பெவேரியா பேசியானா மற்றும் வெர்டிசீலியம் லக்கானி போன்ற இயற்கை வகையில் இயங்கும் திரவங்களை 100 லிட்டருக்கு ஒவ்வொன்றையும் 700 மி.லிட்  கலந்து 7 நாட்கள் இடைவெளியில், (இருமுறை மட்டும் ) மாலை 5 மணிக்கு மேல் செடி முழுவதும் நன்கு நனையுமாறு தெளிப்பது நலம். இத்திரவங்களில் உயிர்கள் இருப்பதால் அவை இறந்து விடாமலிருக்க தெளிப்பதற்கு முடிந்தவரை பேட்டரி தெளிப்பானைத் தவிர்க்கலாம். முடியாத நிலையில் தெளிப்பானின் வேகத்தினைக் குறைத்து வைத்து தெளிப்பது சிறப்பு. மல்லிகை செடியின் தூரில் மாதமொருமுறை பூஞ்சாணக்கொல்லியான சூடோமோனாஸை குறைந்தபட்சம் பவுடராக இருந்தால் 10 கிராமும் திரவமாக இருந்தால் 5 மி.லிட் கலந்து வேரில் அளித்து பாசனம் செய்து,  பின்பு அது கொடுத்த அடு...

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை!!

கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம், மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும். பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும்.  கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும். பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.கன்றுகளுக்கு நோய்  வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்...

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

🌿 விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம். 🌿 ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். 🌿 ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள். 🌿 மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். 🌿 தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் : 🍁 வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயத்தை பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றை பயிர...

வெங்காயத்துக்கேற்ற இரண்டு பட்டங்கள்!

“சின்னவெங்காயத்துக்கு, சம்பா பட்டம் (ஆனி முதல் ஆவணி மாதம் வரை), குறுவைப்பட்டம் (ஐப்பசி முதல் தை மாதம் வரை) ஆகிய இரண்டு பட்டங்களும் சிறந்தவை (இவர் சம்பா பட்டத்தில் வெங்காயம் நடவு செய்திருக்கிறார்). சம்பா பட்டத்தில் விதைக்க வேண்டுமென்றால், வைகாசி மாதக் கடைசியிலேயே ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை உழவு செய்து காய விட வேண்டும். குறுவைப் பட்டத்தில் விதைப்பவர்கள் என்றால், புரட்டாசி மாதக் கடைசியில் ஆட்டுக்கிடை அமைத்து காய விடலாம். சம்பா சாகுபடிக்கு ஆனி மாதமும், குறுவைக்கு ஐப்பசி மாதமும் ஓர் உழவு அடித்துவிட்டு... உழவடித்த அன்றே 10 அடி நீளம் 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். 60 சென்ட் நிலத்துக்கு 250 பாத்திகள் வரை வரும். பாத்தி எடுத்த உடனே தண்ணீர் பாய்ச்சி, தலைப்பகுதி மேலே இருக்குமாறு வெங்காயத்தின் முக்கால்பகுதியை மண்ணுக்குள் புதைத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, 4-ம் நாள் மற்றும் 9-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். நுனிக்கருகலுக்கு, வேப்பங்கொட...

சிறுதானியம் பயிரிட்டு பெருவாழ்வு வாழலாம்!

தமிழகத்தில் பாரம்பரிய உணவான சிறுதானிய உற்பத்தி குறைந்து வரும் நிலையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்து அவற்றின் விதைகளை மற்ற விவசாயிகளுக்கு வழங்கி வரும் இயற்கை விவசாயியை பற்றி இங்கு படித்தறியலாம்! விழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் இயற்கை விவசாய அனுபவங்களைத் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்... சிறுதானிய சாகுபடியை எத்தனை வருடங்களாக செய்துவருகிறீர்கள்? தேனையும் தினை மாவையும் உண்டு நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்ததை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது. தமிழகத்தில் பரவலாக நடைபெற்ற சிறுதானிய சாகுபடி தற்போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. நான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் சிறுதானியங்களை நான் சாகுபடி செய்யவில்லை, ஈஷாவின் தொடர்புக்கு பின்புதான் சிறுதானியங்கள் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. பல்லடத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயப் பயிற்சியில் நாட்டுரக விதைகள், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சிறுதானிய விதைகளை கோவை வேளாண் பல்க...

விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா

நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது. விலங்குகள் மற்றும் மனிதர்களில், பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்கும் எடை கூட...

டெல்டா மற்றும் கடலோர மாவட்ட விவசாயிகளுக்கான தமிழக அரசின் சிறப்புத்திட்டம்.

தமிழகத்தில் நிலவும் நிலத்தடிநீர் குறைவு, மானாவாரி நிலங்கள் அதிகரித்தல், நிலங்கள் உப்பாகுதல், கடல்நீர் உட்புகுதல், போன்ற அதிகரித்துவரும் நீர்த் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான நாகபட்டினம், தஞ்சாவூர்,   திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 10000 பண்ணைக்குட்டைகளை ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ 100 கோடிகளில் செயல்படுத்த வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த சிறப்புத் திட்டம் வேளாண் பொறியியல் துறை மூலம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் தெரிவித்துள்ளபடி ரூ. 1 லட்சத்திற்குப் பண்ணைக்குட்டை அமைத்தால் சுமார் 18-20 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு குட்டையில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மழைநீரை அதிக அளவில் சேகரிக்க வாய்ப்புள்ளதால் கடைமடையில் உள்ள விவசாயிகள் ...